சவுக்கடியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சவுக்கடி கடல் பிரதேசத்தில்அடர்ந்த காட்டுப்பகுதியில் உருக்குலைந்து துர்நாற்றம் வீசிய நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்றினை மீட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடி கடற்கரையோர காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றவர்கள் புதர் ஒன்றிற்குள் சடலடொன்று கிடப்பதை அவதானித்து ஏறாவூர்ப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது  மதிக்கத்தக்க குறித்த பெண் சல்வார் அணிந்த நிலையில் உருக்குலைந்து காணப்பட்டதால் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.



சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நிதிமன்ற பதில் நீதிபதி டி.சின்னையா சட்ட வைத்தியதிகாரி ஏஎன் தாஹிர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள ஏறாவூர்ப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.